Thursday 8 December 2011

நூல் வெளியீடு - பங்குச் சந்தையில் பணம் பண்ண..!

  • Thursday 8 December 2011
  • RDS Promoters
  • Share
  • பங்குச் சந்தை நிபுணர் ஜி. ரமேஷ் எழுதிய பங்குச் சந்தையில் பணம் பண்ண..! என்கிற பங்குச் சந்தை தொடர்பான  டெக்னிக்கல் அனாலிசிஸ் நூல் வெளியீட்டு விழா  தேவ நேய பாவாணர்  அரங்கம்,
    சென்னை 600002 -ல் நடந்தது.விழாவுக்கு வந்தவர்களை இந்நூலை வெளியிட்டிருக்கும் பெரிகாம் பதிப்பாசிரியர் க.ஜெயகிருஷ்ணன் வரவேற்றார்.

    விழாவுக்கு ஏ.பி.ஜே. அக்வா ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.பி.ஜே. குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரி  சேர்மன் டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்றார். முதல் பிரதியை வெளியிட்டு பேசிய சாய்ராம்  பொறியியல் கல்லூரி மற்றும் கல்விக் குழுமத்தின் செயலாளர் மு. வாசு, பங்குச் சந்தை குறித்த முதல் தமிழ் டெக்னிக்கல் நூலை வெளியிடுவதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டார்.
    முதல் பிரதியை வருமான வரித் துறை துணை இயக்குநர் வி.நந்தகுமார், ஐ.ஆர்.எஸ் பெற்றுக் கொண்டார்.

    மேலே உள்ள படத்தில்:
      பங்குச் சந்தை நிபுணர் ஜி.ரமேஷ் எழுதிய பங்குச் சந்தையில் பணம் பண்ண..! என்கிற தமிழின் முதல்  டெக்னிக்கல் அனாலிசிஸ் நூலை சாய்ராம்  பொறியியல் கல்லூரி மற்றும் கல்விக் குழுமத்தின் செயலாளர் மு. வாசு வெளியிட வருமான வரித் துறை துணை இயக்குநர் வி.நந்தகுமார், ஐ.ஆர்.எஸ் பெற்றுக் கொண்டார். அருகில் ஏ.பி.ஜே. அக்வா ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.பி.ஜே. குணசேகரன்,  டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரி  சேர்மன் டி.ஜே.கோவிந்தராஜன், நூலாசிரியர் ஜி.ரமேஷ், பெரிகாம் பதிப்பாசிரியர் க.ஜெயகிருஷ்ணன் ஆகியோர் உள்ளார்கள்.

    பங்குச் சந்தை நிபுணர் எஸ். லெட்சுமணராமன், சன் டிவி மகாதேவன், நாணயம் விகடன் சரவணன் ஆகியோர்  பாராட்டி பேசினார்கள்.அடுத்து நூலாசிரியர் ஜி.ரமேஷ் ஏற்புரை நிகழ்த்தினார்.  சன் டிவி வர்த்தக உலகம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆர்.ரெங்கராஜ் நன்றி கூறினார்.


    Subscribe